சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரர்நல்லூர் ஊராட்சியில் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை ஞாயிறன்று (ஜூன் 12) சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் பாபு, பாரதிதாசன் சமூக நலச்சங்க தலைவர் ஜெயபாலு, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் கருணாநிதி, சமூக ஆர்வலர் குறிஞ்சிவளவன், ஓய்வு பெற்ற பொறியாளர் பழனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.