districts

img

பணி ஒய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு சிஐடியு பாராட்டு விழா

கடலூர்,ஜூன்.26- நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற சிஐடியு நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், பகுதிக் குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தாங்கினார். ஓய்வு பெற்றவர்களின் பணிகளை பாராட்டி சங்கத்தின் முன்னாள் சிறப்பு தலைவர். ஜி.இராமகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், முன்னாள் தலைவர் வி.முத்துவேல், பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு, துணைத்தலைவர் ஆர்.பாலமுருகன் ஆகி யோர் பேசினர். பணி ஓய்வு பெற்ற வர்களின் சார்பில் மாநிலக்  குழு உறுப்பினர் ஏ.வேல் முருகன், மாவட்டப் பொரு ளாளர் ஜி.குப்புசாமி, ஆகி யோர் ஏற்புரை வழங்கினர். பொருளாளர் எம்.சீனுவாசன் நன்றி கூறினார். விழாவில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ஒய்வு பெற்ற நிர்வாகி கள், நிர்வாககுழு உறுப்பி னர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் எம்.மீனாட்சிநாதன், என்.சாமிதுரை, பி.முருகேசன் உள்ளிட்டு 300 பேர் கலந்து கொண்டனர்.