districts

img

பண்ருட்டியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

கடலூர், டிச. 1- ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த 30ஆண்டுகளாக நடத்தி வருகிறது. “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல்” என்ற கருப் பொருளில் இந்த ஆண்டு ஆய்வு கள் மேற்கொண்ட மாணவர்க ளின் மாவட்ட அளவிலான மாநாடு பண்ருட்டி ஜான் டுவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்டத்  தலைவர் எஸ்.பாலகுருநாதன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.பரமேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீபன் நாதன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழக புல தலைவர் முனைவர் முத்துக்குமரன் சிறப்பு ரையாற்றினார்.

பள்ளி முதல் நிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி, அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தாமோதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். ஒருங்கிணைப்பாளர் லலிதா கார்த்தி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 21 பள்ளிகளைச் சேர்ந்த 91 குழுக்கள் தங்களது ஆசிரியர்களுடன் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.   மாவட்டப் பொருளாளர் உதயேந்திரன், விக்டர் ஜெய சீலன் தலைமையில் ஆய்வு செய்த நடுவர் குழு நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி, பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் பள்ளி, நியூ ஜான் டுவி பள்ளி, புனித அன்னாள் உயர் நிலை பள்ளி, விருத்தாச்சலம் ஜெய பிரியா சிபிஎஸ்இ பள்ளி, வடகுத்து ஜெயபிரியா பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி மற்றும் திருகண்டஸ்வரம் நகராட்சி பள்ளியை சேர்ந்த ஒன்பது குழுக்கள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட குழந்தை விஞ்ஞானிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள் நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. ஜான் டூவி பள்ளி குழும தாளாளர் டாக்டர் வீரதாஸ் மாண வர்களை பாராட்டி பேசினார். மேலும் தேர்வு செய்யப்பட்ட இக்குழுக்கள் வரும் டிசம்பர் 10, 11  ஆகிய தேதி களில் தூத்துக்குடியில் நடை பெற உள்ள மாநில அளவிலான மாநாட்டில் பங்கு பெற உள்ளனர்.