districts

img

ரேசன் கடையில் தரமற்ற அரிசியா? கடையை முற்றுகையிட்ட மக்கள்

சிதம்பரம், பிப் 17- கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே கீழ கடம்பூர் கிராமத்தி லுள்ள ரேசன் கடையில்  600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. வெள்ளியன்று (பிப். 17) வழங்கப்பட்ட அரிசியில் சுண்ணாம்பு கட்டி போன்ற அடர் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருந்தது. இதை வாங்கி சென்று  சமைக்க அரிசி கழுவும் போது தண்ணீரில் மிதந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்பட்டுள்ளதாக கூறி ரேசன் கடையை முற்றுகையிட்டு விற்பனை யாளரிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டு மன்னார்கோயில் வட்டாட்சியர் தமிழ்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர் அன்புராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ரேசன் பொருட்களை ஆய்வு செய்து அரிசி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி னர். பின்னர் அந்த அரிசிக்கு பதிலாக மாற்று அரிசி வழங்கப்பட்டது. இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.