சிதம்பரம், செப் 28- சிதம்பரம் அருகே எண்ணா நகரம் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள தெருவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று வருகிறார்கள். அந்தத் தெருவில் பள்ளிக்கூடம் உள்ளதால் குழந்தைகள் செல்லும் போது மெதுவாகச் செல்லுங்கள் எனக் கூறினர். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை (செப். 17) எண்ணா நகரம் கிராம சாலையில் கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (18) என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் பள்ளிகூட நேரம் மெதுவாகச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு பிரகாஷ்“ நீயெல்லாம் இப்படி பேசும் அளவுக்கு வந்துட்டியா? 1 எனக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு வருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள் ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரகாஷ், அவரது அண்ணன் பிரேம், கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, சுகுமார், சசி, முத்துகுமார், தினேஷ் மற்றும் சிதம்பரம், கீழமணக்குடி, குறி யாமங்கலம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் கட்டை, இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்க ளுடன் அருண்குமார் வீட்டிற்குச் சென்று ள்ளனர். அங்கு அவர் வீட்டில் இல்லாத தால் வீட்டைத் தாக்க முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள் இவர்களைத் தடுத்துள்ளனர். தடுத்தவர்களையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கி அவர்க ளின் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி யுள்ளனர். இதில் கீரப்பாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கவியரசன் (28) மற்றும் மச்சகேந்திரன் (65) ஆகிய இருவருக்கும் படுகாயமடைந்தனர்.
அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த மங்கை யர்க்கரசி உள்ளிட்ட 6 பேருக்குத் தாக்கு தலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்கவந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி, சுகு மாரை அங்கிருந்தவர்கள் பிடித்து, அவர்கள் வந்த 2 இருசக்கர வாகனத் தையும் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் அந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர். காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியச் செயலாளர் செல்லையா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சின்னதம்பி, மாவட்டச் செயலாளர் வினோத்குமார், பொரு ளாளர் சதீஷ்குமார், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஆசிய ஜோதி, தியாகராஜன், பூவை பாபு உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.