districts

img

குடிநீர் கேட்டு வேப்பூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் மறியல்

கடலூர்,ஜூலை 14- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதுகுடி பகுதியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த  ஒரு வார காலமாக பள்ளிக்கு குடிநீர்  வராத காரணத்தால் பள்ளி மாணவகள்  வியாழனன்று (ஜூலை 14) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேப்பூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு நடத்தி  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க  நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை யடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.