கடலூர், மார்ச் 7- புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வானவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வரு கிறது. மாசி மக திருவிழாவுக்காக பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழி லாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் தரை மட்டமானது. இதில் புதுவை அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் என்பவரின் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார். மேலும், 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பேரும் புதுவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.