சிதம்பரம், மே 16- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி சென்றவர்கள் 5 ஆண்டுகள் கடந்துவிட்டதால் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ள வலியுறுத்தி பல்வேறு கட்டங்க ளாக போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழக வளா கத்தில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 நாள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை திங்களன்று (மே 16) துவக்கினர். இதில் பணி நிரவல் மூலம் சென்ற ஊழியர்களை மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சுழற்சி முறையில் பணியாளர்களை பணி நிரவல் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் பெண் பணி யாளர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.