districts

img

பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்ணாமலை பல்கலை. ஒப்பந்தம்

சிதம்பரம், ஜூலை 12- புது தில்லியில் உள்ள இந்தியாவின் சர்வ தேச அரிசி ஆராய்சி நிறு வனத்தின் அலுவலகத்தில் பிலிப்பைன்ஸின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும்  ஹரியானா வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது.   இந்த ஒப்பந்தத்தில் கை யொழுத்திட்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறு வனத்தின் இயக்குநர்  டாக்டர் ஜீன் பாலி, “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நிறு வனங்களுக்கிடையில் ஒரு வலுவான கூட்டாண்மைக் கான அடித்தளத்தை வலுப்படுத்தும்” என்றார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தொடர் முயற்சிகள், கூட்டாண்மை மற்றும் ஒத்து ழைப்புக்காக துணை வேந்தர் இராம.கதிரேசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.