districts

img

மாணவர் சங்க போராட்டத்திற்கு வெற்றி தேர்வு முடிவு குளறுபடிகளை சரி செய்தது அண்ணாமலை பல்கலைக்கழம்

சிதம்பரம், ஏப். 5- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும்  முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்க ளுக்கு தேர்வு முடிவுகள் மார்ச் 23ஆம் தேதி வெளியானது. இதில் பல்வேறு மாண வர்கள் தேர்வு எழுதியிருந்தும் ஆப்சன்ட் போடப்பட்டிருந்தது. அதேபோல் பரவலாக மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மற்றும் ஒற்றை  இலக்கு எண்களுடன் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள தேர்வு முடிவுகளில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்யக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக புதனன்று (ஏப். 5) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்திய மாணவர் சங்க தலைவர்கள் மற்றும் மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் லெனின், துணைத் தலைவர் சவுமியா, கிளைச் செயலாளர் அவினேஷ், அஜித் குமார், கார்த்திகேயன், சிவகுரு ஆகி யோர் கலந்து கொண்டனர். அப்போது தேர்வு எழுதியும் ஆப்சென்ட் போடப்பட்ட மாணவர்களின் பேப்பர் உடனடியாக திருத்தப்படும் என்றும் பூஜ்ஜியம் மற்றும் ஒற்றை இலக்கு எண்களுடன் மதிப்பெண் போடப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக கட்டணம் ஏதுமில்லாமல் மறுமதிப்பீடு செய்வதாகவும் அண்ணாமலை பல்கலைக் கழகம் உறுதி அளித்துள்ளது. இதனை இந்திய மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது. அதேபோல் கடந்த 3ஆம் தேதி  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ்  இயங்கும் சி.முட்லூர் அரசு கலைக்  கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்க ளுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதிலும் பல்வேறு மாணவர்களுக்கு ஏராள மான குளறுபடிகள் வந்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.