districts

அண்ணாமலை பல்கலை  தேர்வு மோசடி:  126 பேர் ஆஜர்

கடலூர், ஏப். 26- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 126 பேர் ஆஜரானார்கள்.  2014 ஆம் ஆண்டு நடை பெற்ற இளநிலை, முதுநிலை இறுதியாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை திருத்தும் போது அதில் சில விடைத் தாள்கள்  வித்தியாசமாக  இருப்பது தெரிய வந்ததால் கணினியால் திருத்தம் செய்ய முடியவில்லை. இதுகுறித்து, பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியதில் தேர்வில் முறை கேடு நடைபெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  இதையடுத்து பல்கலைக்  கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றிருப்பது தெரிய வந்ததால் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மையங்க ளில் தேர்வு எழுதியவர்களுக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் புதியதாக விடைத்தாள் வழங்கி அதில் தேர்வு எழுத வைத்துள்ளனர். அந்த விடைத்தாளை ஏற்கனவே எழுதப்பட்டிருந்த விடைத் தாளுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளனர் என்ற விபரம் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தாக அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் 20 பேர் மற்றும் 127 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் விசாரணை கடந்த பிப்.28 ஆம் தேதி நடைபெற்ற போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் பங்கேற்கவில்லை.செவ்வாய்க்கிழமை (ஏப்.26)  இரண்டாம் கட்ட விசாரணை  நடைபெற்றது. நீதிபதி என்.பிரபாகர் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 126 பேர் ஆஜரானார்கள். அவர்களின் விபரங்களை நீதிபதி பதிவு செய்தார்.