கடலூர், ஆக.20- பெண்ணாடத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் 2013 முதல் 2017 வரை மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலை ரூ.78.62 கோடி விவ சாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் பெற்று தர வேண்டும்.
அம்பிகா ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் ரூ.180 கோடி கடன் வாங்கி ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டு, இந்த கடன் தொகை விவ சாயிகள் பெயரில் உள்ள தால் விவசாயிகள் வங்கி யில் கடன் பெற முடி யாமல், வரவு செலவு செய்ய முடியாமல் அவதி அடைகின்றனர். இந்த கடன் தொகையை ஆலை கள் மீது மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அம்பிகா ஆலை பகுதி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், மாநிலத் தலை வர் எஸ்.வேல்மாறன், மாநில செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜோதிராம், விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் ஜி. ஆர்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், மாவட்டப் பொருளாளர் ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.