கடலூர்,ஜூலை 12- கடலூர் மாநகராட்சியின் புதிய பேருந்து நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.புதூரில் அமைப்பது என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கடலூர் நகர அனைத்து கட்சிகள், குடியிருப்போர் சங்கம், பொது நல அமைப்புகள், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும். கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் பகுதியில் நகரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.