districts

img

கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி

சிதம்பரம், ஜன 31- சிதம்பரம் அருகே மேல்அனுவம்பட்டு கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி குறித்து கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு வேளாண் விரிவாக்க திட்ட பொறுப்பாளர் இணைப்பேராசிரியர் சண்முகராஜா தலைமை தாங்கினார்.  மேல் அனுவம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி மருதப்பன், துணைத் தலைவர் கலாஅய்யாசாமி, முன்னிலை வகித்தனர்.  பல்கலைக்கழக வேளாண் புல உழவியல் துறை இணைப் பேராசிரியர்  பாபு  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேளாண் மாணவிகள் கிராமத்தில் விவசாயிகளின் வாழ்விடபகுதியில் தங்கிகொண்டு அவர்கள் செய்யும் விவசாய தொழிலை நன்கு கற்றும் நவீன வேளாண்மை குறித்தும் விவசாயிகளிடம் கூறுவதால் விவசாய வளர்ச்சிக்கு பெரும்துணையாக இருக்கும் என பேசினார்.  மேல் அனுவம்பட்டு பணிதள பொறுப்பாளர். ஆதிசண்முகம் மற்றும் விவசாய பெருமக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிகளின் குழு தலைவி ஷாஷினி வரவேற்புரை ஆற்றினார், இந்நிகழ்வினை மாணவி ஷண்முக லட்சுமி தொகுத்து வழங்கினார், விழாவின் இறுதியில் மாணவிகளின் குழு துணைத் தலைவி ஷர்மி நன்றிகூறினார்,  இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை பற்றிய முக்கியத்துவம் பற்றியும், தொடர்ந்து பல்கலைக்கழக 15 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் வயல்களுக்கு சென்று பயிர்சாகுபடி குறித்தும்,களப் பணி மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.