districts

கடலூர் அருகே 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

கடலூர், மார்ச் 1- கடலூர் அருகே தொண்ட மாநத்தம் நிலப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள நிலப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது நிலப்பகுதி யில் சாராயம் ஊறல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 80 லிட்டர் சாராய ஊறலை கடலூர் முதுநகர் காவல் துறையினர் பறி முதல் செய்து காவல் நிலை யத்திற்கு கொண்டு வந்த னர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  ஒருவரை  கைது செய்தனர்.

;