districts

கடலூர் நகரத்தில் 20 பேர் நீக்கம்

கடலூர், மார்ச் 3- கடலூர் நகராட்சியில் கட்சி விரோத நட வடிக்கையில் ஈடுபட்ட கட்சி உறுப்பினர் களை நீக்கம் செய்தும், 3 மற்றும் 6ஆவது வார்டு கட்சி கிளைகளை கலைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலக் குழு உறுப்பினர் டி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:- கடலூர் மாநகர 3ஆவது வார்டில் நகரக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த பி.ஏழு மலை, 3 மற்றும் 6ஆவது வார்டில் செயல்பட்டு வந்த கட்சி உறுப்பினர்கள் கே.உதய குமார், என்.பழனி, ராஜா, டி.செந்தில், பி.சுப்பிரமணியன், ஆர்.முருகன், எம். அசோக்குமார், பி.சதிஷ் குமார், கே.ரமேஷ், பி.செல்வராஜ், ஏ.செந்தில், ஜானகி ராமன் எஸ்.சதன்,  வி.செல்வகுமார், பி.நாராய ணன், பி.ராமகிருஷ்ணன், இ.காமாட்சி, கே.விஜயகுமார், ஆர்.முருகன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தால்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது என்றும் அந்த வார்டு கட்சிக் கிளைகளை கலைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.