கடலூர், ஜூலை 19- கடலூர் காராமணி குப்பத்தை சேர்ந்த சுதன் குமார், மகன் நிஷாந்தன், தாய் கமலேஸ்வரி ஆகிய மூன்று பேரும் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூவரும் கொலை செய்யப்பட்டு பின்பு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி துரிதப்படுத்தினர். கொலை செய்யப்பட்டவர்கள் வசித்த தெருவை சேர்ந்த சங்கர் ஆனந்த் என்பவர் சென்னையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட போது சங்கர் ஆனந்த் கை விரல் துண்டானது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.