கடலூர், மார்ச் 1- கடலூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 150 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை தக வல் தெரி வித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடை பெற்று வரும் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை, மதுபானம் கடத்தல், சூதாட்டம் ஆகிய வற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சி.சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டம் முழுவதும் பிப். 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக 24 பேரை பல்வேறு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அதே போல் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தாக மாவட்டம் முழுவதும் 7 பேரும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 6 பேரும், மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 98 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 314 மது பாட்டில்கள், 3.5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.