ஓசூர் பேருந்து நிலையத்திலுள்ள இலவச சிறுநீர் கழிப்பறை 2 ஆண்டு காலமாக சுத்தம் செய்யாமலும் பராமரிக்காமலும் உள்ளதால் சிறுநீர் வெளியேற வழியில்லாமல் முழுமையாக தேங்கி கொசு, பூச்சி, புழுக்கள் பெருகிய வண்ணம் உள்ளது. தண்ணீர் குழாய்கள் அனைத்தும் உடைந்துள்ளது. இதனால், சிறுநீர் கழிக்க நுழையக் கூட முடிவதில்லை. அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.