ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 17ஆவது பட்டமளிப்பு விழா தலைவர் பெ.குமார் தலைமையில் நடைபெற்றது. பெங்களூரு விருட்சுவா கன்சல்டன்சி மனித வள மேலாண்மை இயக்குநர் சந்திரசேகர் சென்னியப்பன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் செயலாளர் பெ.மலர், கல்லூரியின் அறங்காவலர் பெ.சசிரேகா, முதல்வர் சித்ரா, இயக்குனர் ந.சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.