districts

img

ஊரடங்கில் சட்டவிரோதமாக மது விற்ற ஒருவர் கைது: மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ஊரடங்கில் சட்டவிரோதமாக மது விற்றவரை கைது செய்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

உதகை அருகே சோலூர் கோக்கால் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து மதுபிரியர்களுக்கு விற்பனை செய்வதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, கோக்கால் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி கூலி தொழிலாளியான மோனிஷா (வயது 22) என்பவர் சட்டவி ரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில்  மோனிஷா ஞாயிறன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முன்பே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிகமாக வாங்கி தனது வீட்டுக்கு முன்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விற்பனைக்கு வைத்திருந்த 29 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து  மோனிஷாவை கைது செய்தனர்.