உதகை, ஜூன் 14- உதகையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிர மாக பெய்து வருகிறது. இந்நிலை யில், திங்களன்று மதியம் 12 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, சுமார் 2 மணி வரை இடைவிடாமல் பெய்தது. இந்த கனமழையால் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோ ரம் நிறுத்தி இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத் தில் மிதந்தன. மழைநீருடன், சாக் கடை கழிவுநீரும் வழிந்தோடியது. படகு இல்லம் செல்லும் சாலை யில் ரயில்வே பாலத்தின் கீழ் பகு தியில் தண்ணீர் குளம்போல் தேங்கி யது. இதனால் உதகையிலிருந்து காந்தலுக்கு நகர பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே காவல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல், உதகை நகராட்சி மார்க் கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கடைகளுக் குள் வெள்ளம் புகுந்தது. உழவர் சந்தை கடைகளுக்கு முன்பு தண் ணீர் தேங்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், பலத்த மழை பெய்யும் போதெல்லாம், அரசு மருத்துவ மனை பகுதியிலிருந்து கழிவுநீரு டன் வெளியேறும் மழைநீர், மார்க் கெட்டுக்குள் தேங்கி நிற்கிறது. மார்க்கெட்டில் இருந்து கோடப்ப மந்து கால்வாய்க்கு செல்லும் குழாய் ஆங்கிலேயர் காலத்தில் பதிக்கப் பட்டது. இந்த சிறிய குழாய் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் மார்க் கெட்டில் தேங்குவது வாடிக்கை யாகி விட்டது. இந்த பிரச்சினைக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் தீர்வு ஏற்படுத்தாமல் உள்ளனர். எனவே, மார்க்கெட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.