districts

img

யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிப்பு

உதகை, பிப்.6- குன்னூர்– மேட்டுப் பாளையம் மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்்டுப்பாளையம் மலைரயில் பாதையில் கடந்த ஒரு வார காலமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீருக்காக தண்டவாளத்தை கடந்து செல்கிறது. யானைகள் நட மாட்டத்தால் மலை ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்படுகிறது. இந் நிலையில், ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் தண்ணீ ருக்காக யானைகள் வனத்திலிருந்து தண்ட வாளத்தை கடந்து சென்றன. இதனை ரயில்வே ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டனர்.  இதையடுத்து ரயில்வே துறையினர் யானைகள் கடந்து செல்லும் பாதையில் தடுப் புச்சுவர் கட்டினர். இதனால் யானைகள் தண்டவாளத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு வனவிலங்கு ஆர்வ லர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதுகுறித்து பதில் அளிக்க ரயில்வே துறையி னருக்கு, வனத்துறையினர் உத்தரவிட்டதையடுத்து, அங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை இடிக்கும் பணியில் ரயில்வே துறை யினர் ஈடுபட்டு வருகின்ற னர்.