districts

img

நீலகிரியின் தந்தை ஜான் சல்லிவன் பிறந்தநாள்

உதகை, ஜூன் 15- உதகையை உருவாக்கிய ஜான் சல்லிவனின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த  ஜான் சல்லிவன் 1819 ஆம் ஆண்டு நீல கிரியை கண்டறிந்தார். கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்கள் உத வியுடன் கற்களால் ஆன வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டை தனது அதி காரபூர்வ பங்களாவாகவும், அலுவல கமாகவும் பயன்படுத்தினார். அங்கி ருந்தவாறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்து வந்தார். இதைத் தொடர்ந்து தனது அயராத முயற்சி யால் 1822 ஆம் ஆண்டு உதகையை  உருவாக்கினார். இதன்பின், நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும்  அவர் பணியாற்றினார். இதனால், ஜான் சல்லிவன் நீலகிரியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதனிடையே கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப் பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது.  மேலும், உதகையின் 200 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு  அரசு தாவரவியல் பூங்கா செல்லும்  சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஜான் சல்லிவனுக்கு மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜான் சல்லிவனின் பிறந்த நாளையொட்டி உதகையில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட ஆட்சி யர் அம்ரீத், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், நக ராட்சி ஆணையாளர் காந்திராஜன், நக ராட்சி தலைவர் வாணீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.