districts

img

சுகாதாரமற்ற உடுமலை பேருந்து நிலைய கழிப்பிடம்: முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார்

உடுமலை, ஜூலை 19 - உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற நிலையிலுள்ள கழிப்பிடத்தை தினசரி சுத்தம் செய்து பராம ரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் குமார் முதல்வரின்  தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தினமும் ஆயிரக்க ணக்கானோர் வந்து செல்லும் உடுமலை பேருந்து நிலைய  வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடம் சுகாதார மற்ற முறையில் காணப்படுகிறது. செல்லும் வழியில் தளம்  உடைந்து, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதை  கடந்து உள்ளே சென்றால் மோசமான துர்நாற்றம் வீசுகிறது.  பெரிய தொட்டியில் கை கழுவ தண்ணீர் நிரப்பி வைக்கப்பட் டுள்ளது. ஆனால் அதை எடுக்க வாளி இல்லை.

இதனால், அனைவரும் தொட்டியில் கையை விட்டு கழுவு கின்றனர். மேலும் தினமும் கழிவறையை சுத்தம் செய்யவும்,  பிளீச்சிங் பவுடர், பினாயில் தெளிக்க எந்த ஏற்பாடும் இல்லை.  மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பயணிகள்  இயற்கை உபாதைகளுக்கு பேருந்து நிலைய வெளிப்பு றத்தை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால்,  நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடுமலை நகராட்சி நிர்வாகம்  மக்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுத்து கழிப்பி டத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது.