districts

img

பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்ட கிராமத்தில் தேசிய ஆணையம் விசாரணை

உடுமலை, டிச. 27- பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்ட ராஜாவூர் கிராமத்தில்  தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் நல ஆணை யத்தினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத் துள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் அக்கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அதில்  பட்டியலின மக்கள்  பொது வீதிகளில்  செருப்பு அணிந்து செல்ல முடியாது. அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வந்ததும் அம்பலமானது. 

இதனைத்தொடர்ந்து, ராஜாவூர் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் புகார் அளித்த னர். இதன்மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் அறி விக்கப்பட்டது. இதனையடுத்து, அனை த்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. 

இதைத்தொடர்ந்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபடவும் பொது பாதையில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்து அதனை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுடன் பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடந்து சென்றார்கள்.  இதன்பின் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட்டனர். 

இதன் தொடர்ச்சியாக ராஜாவூர் கிரா மத்தில் புதனன்று தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் நல ஆணை யத்தின் இயக்குநர் ரவிவர்மன், ஆணையத்தின் சிறப்பு ஆலோசகர் ராமசாமி நேரில் விசாரணை மேற் கொண்டனர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர், மடத்துக்குளம் வட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

ஆணையத்தினர் ராஜாவூர் கிராமத்தில் பட்டியலின  மக்கள் குடியிருப்பு பகுதியில் விசாரணை செய்தார்கள். பின்னர் வன்கொடுமைக்கு உள்ளான வர்களின் வீடுகளுக்கு சென்று விசார ணை செய்தார்கள். ஆணைய அதிகாரி களிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மனு தரப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் தவறு செய்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க ஆணையம் சார்பில் பரிந்துரை செய்யப்படும் என்றும், வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி உடனடியாக மாவட்ட நிர்வாகம் தர வேண்டும், தீண்டாமைக் கொடுமைகள் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்து உள்ள தாக தெரிவித்தனர்.