districts

img

தென்னை வளர்ச்சி வாரிய புதிய கட்டிடத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை, ஜூன் 16 - உடுமலை திருமூர்த்திமலைப் பகுதியில் தமிழக அரசு வழங்கியுள்ள இடத்தில் அமைந்து ள்ள தென்னை வளர்ச்சி வாரிய புதிய கட்டிடத் தில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை அமைக் கப்பட்டுள்ளது. அங்கு தமிழில் பெயர் பலகை  அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உடுமலை வருவாய் கோட்ட விவசாயி கள் குறை தீர்க்கும் கூட்டம் வியாழனன்று உடு மலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தின் துவக்கத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் வருவாய் கோட்டாட் சியர் ஜஸ்வந்த் கண்ணன் பேசும்போது, கூட்டத் திற்கான நாள் மற்றும் நடைபெறும் இடம் குறித்து அறிவிப்பதில் ஏற்பட்ட கால தாமதத் தால் கூட்டம் குறித்து முறையாக முன்கூட்டியே தெரிவிக்க முடியவில்லை. இனிமேல் முறை யாக அனைவருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என அறிமுக உரையில் தெரி வித்தார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது, ஜல்லிபட்டி கோபால்: தமிழ கம் முழுவதும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல்  மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி  வழங்கவில்லை. 2017ஆம் ஆண்டு அரசா ணைப்படி, திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல்மண் எடுக்க அனுமதி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணையின் நீர்மட்டம் வெகுவாக  குறைந்திருக்கும் நிலையில், காண்டூர் கால் வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரு வதாலும், பருவமழை துவங்கும் முன்பாக இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.  இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரி காஞ்சித் துரை பதில் கூறுகையில், தற்போது அனு மதி வழங்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில் தான் விவசாயிகள் மண் எடுக்க வேண்டும், திரு மூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என் றார். தமிழ்நாடு விவசாய சங்கம் பாலதண்ட பாணி பேசுகையில், கடந்த சில மாதங்களா கவே விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம், முறைப்படுத்தப்படாமல் நடைபெற்று வரு கிறது. நில அளவை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும்  சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை பகுதி களில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மர்ம  விலங்கு கடித்ததில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள்  பலியாகி உள்ளது. கால்நடை விவசாயிகளின் அச்சத்தை போக்கி, வாழ்வாதாரத்தை காக் கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடைகளை நிலையங்கள் மூலம் அனைத்து கால்நடை களுக்கும் சிறப்பு முகாம் அமைத்து கோமாரி உள்ளிட்ட தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

வனத்துறை:
சின்னவீரம்பட்டி, பெரிய கோட்டை பகுதி களில் ஆடுகள் பலியானதற்கு 20க்கும் மேற் பட்ட தெரு நாய்கள்தான் காரணம், மர்ம  விலங்கு தாக்குதல் இல்லை என தெரிவித் தார். சிபிஐ சௌந்தரராஜன் பேசும்போது, விவ சாயிகளின் கோரிக்கைக்கு, பொதுப்பணித் துறை அதிகாரி பொறுப்பற்ற பதில் அளிக்கி றார். திருமூர்த்தி அணையிக்கு வரும் நீர்  விபரம், பருவமழை உள்ளிட்ட சூழ்நிலைகளை மாவட்ட ஆட்சியருக்கு இங்குள்ள அதிகாரிகள் விளக்கி, வண்டல் மண் எடுக்க உடனடியாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கவும், உடு மலை சுற்று வட்டாரப்பகுதியில் கனிம வளம்  கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகு றித்து, துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியாக எந் தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாள் தோறும் இங்கு சுமார் 300 லோடு செம்மண் மற் றும் கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள், விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர போக்குவ ரத்து வசதி செய்து தர வேண்டும் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் பேசுகை யில், விவசாயிகளின் மனுக்களுக்கு பதில்  அளிக்கக்கூடிய துறை அதிகாரிகள் பங்கேற் கும் வகையில், விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை வேண் டும்.

கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரம் முன்பே  விவசாயிகளுக்கு தகவல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மலை மாடுகள் மேய்வதற்கு, மதுரை  உயர்நீதிமன்ற தீர்ப்பால் இங்குள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இங்குள்ள விவசாயி களை அழைத்து பேசி அவர்களின் கருத்து களை பெற்று அரசாங்கத்திற்கு தெரிவித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் முறையை எளிமைப்ப டுத்தி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க  மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு  சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார். கோழிப்பண்ணைகளை சுகாதாரமான முறையில் அமைத்து நடத்த அனுமதி வழங்க  வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலர் கள் அவர்களுடைய கிராம அலுவலகத்தில் நாள்தோறும் பணியில் இருப்பதை உறுதி  செய்ய வேண்டும். அதேபோல் கால்நடை மருத் துவர்களும் பணி நேரத்தில் மருத்துவமனை யில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.  உடுமலை திருமூர்த்திமலைப் பகுதியில் தமிழக அரசு வழங்கியுள்ள இடத்தில் அமைந் துள்ள தென்னை வளர்ச்சி வாரிய புதிய கட்டத் தில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை அமைக் கப்பட்டுள்ளது. அங்கு தமிழில் பெயர் பலகை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏழு குள பாசனம் பழையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அப்ப குதியில் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆலமரத்தூர் விவசாயிகள்:
ஆலமரத்தூரில் விவசாயிகள் மற்றும் குடி யிருப்பு வாசிகள் பயன்படுத்தி வரும் நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமான தார் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சி யர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உடுமலை வட்டாட்சியர் கணேசன் உள்பட வருவாய் துறையினர், வேளாண் துறை, பொதுப்பணித் துறை உட்பட பல்வேறு துறை  அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் விவசாயி கள் கலந்து கொண்டனர்.