districts

img

நாடு காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது

ஈரோடு, மார்ச் 30 -  ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரித்து ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைக்கலைஞருமான கமல்ஹாசன் உரையாற்றினார்.அவரது உரையின் அம்சங்கள் வருமாறு:

வடமாநிலத்தவர் இங்கு படையெடுப்பது எதனால்?
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மக்களின் உழைப்பு. மதிய உணவு திட்டம் என்பதை காமராஜர் துவங்கி அதற்குப் பிறகு எம்ஜிஆர் தொடர்ந் தார். இன்றைக்கு அதன் நீட்சியாக காலை உணவு திட்டம் முதல்வர்  ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கெல்லாம் உரிமை யாரோ மையத்திலிருந்து கொண்டாட முடியாது. இது மக்களின் உழைப்பி னால் வந்தது. 

எங்கே அந்தப் பணம்?
இங்கு பரவலாக எழும் விமர்சனம், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டிற்கு அதிக மாக படையெடுத்துக் கொண்டிருக் கிறார்கள். கூலி வேலை முதல் பல வேலைகளுக்கும் வடக்கிலிருந்து வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம், அங்கு வேலை இல்லை. ஏன் அங்கு வேலை இல்லை என்பதை நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்  எடுத்துக் கொண்டார்கள் என்றால் நமக்குத் திரும்பவும் 29 பைசா தான் வருகிறது. ஆனால், நமது ஊருக்கு வேலை தேடி வருகிறார்களே, அவர் களது ஊரில் இருந்து வரிப்பணமாக ஒரு ரூபாய் கொடுத்தால் 7 ரூபாய் அவர்களுக்கு திரும்பக் கிடைக்கிறது. ஆனால், அங்கிருந்து கூலி வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வரு கிறார்கள். அப்படியானால் அந்த பணம் எங்கே போயிற்று? 

நான் இங்கே வந்திருப்பது பத விக்காக அல்ல. நாடு காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அது எப்போதும் நமக்கு உள்ளது.

மேற்கிந்தியக் கம்பெனி

இதற்கு முன்பு கிழக்கு இந்திய கம்பெனியின் வெள்ளைக்காரன் இங்கு வந்து நம்மை சுரண்டிவிட்டு போனான். அவனை வெளியேற்றி விட்டோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, ‘மேற்கு இந்தியா’விலிருந்து ஒரு கம்பெனி வந்திருக்கிறது; மேற்கிந்தியா என்பது நமது இந்திய வரைபடத்தில் எங்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கம்பெனி எங்கிருக்கி றது என்று கேட்டால், காந்தி பிறந்த ஊர் அது. இப்போது நடப்பது அந்த (குஜராத்) மேற்கிந்திய கம்பெனியின் ஆட்சி.

விவசாயிகள் போராட்டம், எப்படி நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறோம். ட்ரோன்கள் மூலமாக மக்கள் மீது கேஸ் அடிக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தை இவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தவில்லை, மாறாக விவசாயிகளை துன்புறுத்த பயன்படுத்துகிறார்கள். 

பிள்ளைகள் மீது தேர்வுகள் திணிப்பு

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் பொழுது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதில், வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், மறு படியும் இந்தியை திணிக்கிறார்கள். எங்களுக்கு இந்தி தேவை என்றால் நாங்கள் கற்றுக் கொள்வோம். அதை எங்களிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் திணிக்க வேண்டாம்.  திணித்தால் நடப்பதே வேறு. எதையும் திணிக்காதீர்கள். எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. 1950 ஆம் ஆண்டில் 22 மொழிகளுக்கும் இடம் உண்டு என்று கொடுத்த வாக்குறுதி என்னானது? அதை ஏன் மறந்து விட்டீர்கள் என்பதே கேள்வி.

இவ்வாறு அவர் பேசினார்.