districts

img

சாலை விரிவாக்கப் பணி – ஆட்சியர் ஆய்வு

கோபி, மார்ச்.1- கோபி அருகே சாலை விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண் டார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன. சாலை பலப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.17கோடி மதிப்பீட்டில் கொடிவேரி, காசிபாளையம், கணபதிபாளையம், மூலவாய்க்கால் வரையில் சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது. இதில் 14 இடங்களில் கீழ்மட்ட பெட்டி பாலங்கள் அமைத்தும், இருவழி சாலையை நான்கு வழி  சாலையாக அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் நம்பியூர், அளுக்குளி பகுதியில் நடை பெற்று வந்த சாலை விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சாலையின் நீள அகலம் குறித்தும், சாலை அமைக்கும் தரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித் தும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சாலைப் பணிகளை தரமாக அமைக்கவும், விரைந்து  முடிக்கவும் அறிவுறுத்தினார்

இந்த ஆய்வின் போது, உதவி கோட்ட பொறியாளர் விஜய லட்சுமி, உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் மற்றும் அலு வலர்கள் உடனிருந்தனர்.