districts

img

‘ஸ்டிக்கர்’: அது அதிமுக - பாஜக தான்!

ஈரோடு, மார்ச் 5- ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு  திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வ தாக பிரதமர் மோடி பேசியிருந்தார்.  இதற்கு திமுக துணைப் பொதுச்  செயலாளர் கனிமொழி கருணா நிதி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

ஒன்றியத்தில் உள்ள ஆட்சி,  மதத்தை வைத்து ஒருவருக்கொரு வர் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என்று  விரோதத்தை தொடர்ந்து உரு வாக்கி, அரசியல் செய்து வருகிறது.  இது மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்  துள்ளது. மணிப்பூரில் இரு பெண் கள் பாலியல் வன்கொடுமை செய்  யப்பட்ட சம்பவத்தில் இன்று வரை  நீதி கிடைக்க வில்லை. இதுவரை  பிரதமர் நரேந்திர மோடி மணிப்  பூர் செல்லவில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாத வகையில், இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்லூரி படிப்பை படிக்க, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைபெண் திட்டம் கொண்டு வந்தார்.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு  திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில்,  ஒன்றிய அரசு கால் சதவிகிதம் நிதி  கொடுக்கும் நிலையில், முக்கால்  சதவிகிதம் நிதியை மாநில அரசு  வழங்குகிறது. ஆனால், அதற்கு பிர தமர் மோடி ஸ்டிக்கர் ஒட்டுகிறார். தமிழகத்தை பொறுத்தவரை இரு ஸ்டிக்கர் உள்ளது. ஒன்று பாஜக, மற்றொன்று அனைத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுக. தற் போது தேர்தலுக்காக இரண்டு ஸ்டிக்கர்களும் பிரிந்துள்ளது. தேர்  தலுக்கு பின்னர் அதிமுக, பாஜக  இரு ஸ்டிக்கர்களும் ஒட்டிக்கொள் ளும்.

உலகத்தில் மிகப்பெரிய ஊழல்  என்பது தேர்தல் பத்திரம் தான். இதில் யார் எந்த கட்சிக்கு எவ்வ ளவு பணம் கொடுக்கிறார்கள் என்று  தெரியாது. தேர்தல் பத்திரம் மூலம்,  மற்ற அரசியல் கட்சிகளை விட  மூன்று மடங்கு தேர்தல் பத்திரத் தைப் பாஜக பெற்றுள்ளது. உச்ச  நீதிமன்றம், இந்த சட்டம் செல்லாது  என்று கூறியுள்ள நிலையில், யாரெல்லாம் பணம் கொடுத் தார்கள் என்பதை சொல்வதற்கு பாஜக முன்வரவில்லை. ஊழ லுக்கு புதிய வழிமுறைகள், பாடங் கள், சட்டங்களை சொல்லித் தரும்  கட்சி தான் பாஜக. நாட்டை பிளவு  படுத்தும் கட்சிக்கு இந்த நாட்டில் இடம் இல்லை என்ற பாடத்தை சொல்ல வேண்டும்.”

இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியுள்ளார்.