districts

img

பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 13-  நூல் விலை உயர்வைக் கட்டுப்ப டுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பரவலான இடங் களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்று மதியை தடை செய்ய வேண்டும். பருத் தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு பதுக்கலை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பருத்தி கழகத்தை தொடங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஈரோடு மாவட்டத்தில் பர வலான இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நகர செயலாளர் பி.சுந்த ரராஜன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ். சுப்ரமணியன், தாலுகா செயலாளர் என்.பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.  இதேபோல், பெருந்துரை வட்டம் சென்னிமலையில் தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பர மசிவம், தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி உள்ளிட்டோர் உரையாற்றி னர்.  பவானியில் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். இதேபோன்று அந்தியூ ரில் ஏ.கே.செல்வராஜ் தலைமை யில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டங்களில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.  பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி மாவட்டமாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பரவலான ஆர்ப் பாட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.