districts

img

தோழர் தா.பாண்டியன் நினைவு மலர் வெளியீடு

ஈரோடு, ஏப்.3- ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா.பாண்டியன் நினைவு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த தலைவருமான மறைந்த தா.பாண்டியனின் நினைவு மலர் வெளியீட்டு விழா ஞாயிறன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கே.ஆர்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விழாவில் தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூலை வெளியிட சிபிஐ மாநிலக் குழு  உறுப்பினர்  த.ஸ்டாலின் குணசேக ரன் பெற்றுக் கொண்டார். மேலும், மேயர்  நாகரத்தினம் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் இ.வி. கே.எஸ்.இளங்கோவன்,  கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா, திமுக  மாநகர செயலாளர் மு.சுப்பிர மணியம், சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ மாநில கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் வி.பி.குண சேகரன், ஏஐடியுசி சின்னச்சாமி ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளா னோர் கலந்து கொண்டனர்.

;