ஈரோடு, ஜூலை 14- சமூக நலத்துறை மூலம் வட்டார அளவில் தையல் பயிற்சி மையங்கள் அமைக்க வேண் டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட தையல் தொழிலாளர் சங்க மகாசபை ஈரோட்டில் எஸ்.கலைவாணி தலைமையில் நடைபெற்றது. சம்மேளன பொதுச்செயலாளர் எம்.ஐடாஹெலன் சிறப் புரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். இக்கூட் டத்தில், வீடுகளில் ஒரு தையல் இயந்திரம் வைத்து வேலை செய்வோருக்கு மும் முனை மின்சாரம் இலவசமாக வழங்க வேண் டும். தையல் கூட்டுறவு சங்கங்களில் உறுப் பினர்களை சேர்க்க வேண்டும். பெண் தொழி லாளர்களுக்கு மாநில அரசு இலவசமாக தையல் இயந்திரம் வழங்க வேண்டும். சமூக நலத்துறை மூலம் வட்டார அளவில் தையல் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். நல வாரிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள், ஓய்வூதிய மனுக்கள் ஆன்லைனில் பதிவை எளிமையாக்க வேண்டும். நேரடியாகவும் நலவாரிய பணிகளை மேற்கொள்ள வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.கலைவாணி, பொதுச்செய லாளராக சி.குமரேசன், பொருளாளராக ஜெ. தனசேகரன் உள்ளிட்ட 8 நிர்வாகிகளும், 15 பேர் கொண்ட தையல் சங்க குழு தேர்வு செய் யப்பட்டது.