இராமேஸ்வரம், டிச. 7 - எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்கள், இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் என தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
மிக்ஜம்புயல், சீரற்ற வானிலை காரண மாக கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமலிருந்த தமிழக மீனவர்கள் புதன்கிழமைதான் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், அவர்களில் 2 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, மீனவக் குடும்பங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
2023-ஆம் ஆண்டு டிசம்பர் வரை 195 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.