districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா அளவில் கலையரங்கம் அமைத்திடுக! தமுஎகச மாவட்ட மாநாடு கோரிக்கை

இராமநாதபுரம், ஜூன் 19-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் இராமநாதபும் மாவட்ட 9 ஆவது மாநாடு இராமநாதபுரம் ரோசரி மன்  றம் நா.அறிவழகன் நினைவு அரங்கத்தில் முகவை அழகு டையான் தலைமையில் நடை பெற்றது. முத்துலட்சுமி, வழக்கறிஞர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். ஸ்டா லின் வரவேற்றார். மாநிலச்  செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரசா துவக்க உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் இரா ஆ.வான் தமிழ் இளம் பரிதி, மாவட்ட நிர்வாகிகள் என்.கலையரசன் மற்றும் கோவிந்த ரவி ,கவிப்ரியன் ஆகியோர் அறிக்கை சமர்ப் பித்தனர். சகோதர சங்க நிர்  வாகிகள் பெ.சேகர் குணசேக ரன், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ்  கனி வாழ்த்திப் பேசுகையில், ஒன்றிய பாஜக நாடு முழு வதும் வெறுப்பு அரசியல்,  பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. புல்டோசர் அரசியல் நடத்து கிறது. இதற்கெதிராக சமரச மற்ற பணிகளை நீங்கள் செய்து வருவது போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய நாங்களும் பணி யாற்றி வருகிறோம். குறிப்  பாக தமிழகத்தில் நாம் நல்லி ணக்கத்துடன் உள்ளோம். மக்கள் பணியாற்றி வருகி றோம். பாஜக ஒன்றும்  அசைக்க முடியாத சக்தி  அல்ல. மதச்சார்பற்ற மக்க ளின் ஒருங்கிணைப்போடு அகற்ற முடியும். 2024 இல்  மதச்சார்பற்ற சக்திகளை  நெருக்கமாக ஒருங்கிணைத்து பாஜகவை அகற்றுவோம் என்றார்.

நவாஸ்கனி எம்.பி.க்கு மாநாட்டில் நினைவுப் பரி சாக புத்தகம் வழங்கப் பட்டது. மாநாட்டில் மாவட்ட தலைவராக முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளராக இரா. ஆ.வாழ் தமிழ் இளம்  பரிதி, பொருளாளராக ஆதி ரன் ,துணைத் தலைவர்களாக கண்ணதாசன், வழக்கறிஞர் சந்திரசேகரன், பேராசிரியர் ரேணுகா தேவி, துணைச் செயலாளர்களாக என் .கலை யரசன், வா.ஸ்டாலின் சாந்தி உட்பட 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்  யப்பட்டது மாநில துணைப் பொதுச்செயலாளர் அ . இலட்சுமி காந்தன் நிறைவுரை யாற்றினார். தமுஎகச கலை இரவுக்கு மாவட்ட காவல்துறை நேரக்  கட்டுப்பாடு விதிப்பது ஏற்பு டையதல்ல. நாட்டுப்புற கலைஞர்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு முழுவதும் தமு எகச மேடைகள் சமூகப்  பொறுப்புடன் முற்போக் கான கருத்துக்களை இரவு முழுவதும் மக்களுக்காக கொண்டு செல்கிறது. எனவே நேரக் கட்டுப்பாடு விதிக்காமல் முழுமையாக நடத்திக்கொள்ள தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனு மதி தர வேண்டும். இராம நாதபுரம் மாவட்டத்தில் தாலுகா அளவில் கலையரங்  கங்கள் கட்டித்தர வேண்டும். அழகன்குளத்தில் அகழ்வா ராய்ச்சி பணியை துவங்கி, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இராமநாத புரத்தில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சனிக்  கிழமை அன்று அரண்மனை முன்பாக தோழர் எம் குமார் நினைவு திடலில் கலை இலக் கிய இரவு வரவேற்புக் குழுத் தலைவர் ஆர். குரு வேல் தலைமையில் நடை பெற்றது. ஸ்டாலின் வரவேற்  றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் இலட்சுமி காந்தன், திரைப்பட இயக்கு னர் தி.தமிழ், மாநிலக் குழு  உறுப்பினர்கள் தேனி வசந் தன், ஜீவசிந்தன் ஆகியோர் உரையாற்றினர்.  திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, லிம்போ கேச வன், உடுமலை துரையர சன், முகவை அலைகள், எம். ராஜ்குமார் பாடல்கள் மற்றும் ரோகிணி பரதம் இடம்பெற் றன. நிகழ்ச்சிகளை ஆர்.குரு வேல், பி.செல்வராஜ் ஆகி யோர் தொகுத்து வழங்கினர்.