இராமநாதபுரம், பிப்.16- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் சந்தை வியாபாரிகளிடம் நேரடியாக சந்தை வாடகை வசூல் செய்ய வேண்டும். சாலையோர சந்தை வியாபாரிகளை விடுபடா மல் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். சந்தை யில் தரைக்கடை வாடகை வசூல் செய்யும் தொகைக்கு உரிய ரசீது தரப்பட வேண்டும். சந்தையில் கட்டப்படும் புதிய கடைகளை சங்க உறுப்பினர்களுக்கும் பாரம் பரிய வியாபாரிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உரிய பாது காப்பு தரப்பட வேண்டும் என வலி யுறுத்தி கமுதி வட்டார சந்தை வியா பாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு முறைசாரா சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.முத்துவிஜயன் தலைமை வகித்து பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் எம். அய்யாத்துரை, ஆர். வாசுதேவன், ஆர்.குருவேல் ஆகியோர் பேசினர். கமுதி வார சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராமு, அண்ணாத் துரை, ஆலடீஸ்வரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் சிஐடியு தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக ஆய்வு அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.