இராமநாதபுரம், மார்ச் 31- விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்து ராமலிங்க சேதுபதி அவர்களின் 263-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 30 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அன்னா ரின் முழு திருவுருவச்சிலைக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, மாவட்ட வருவாய் அலுவ லர் (பொ) ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட ரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி பேசுகை யில்,இராமநாதபுரம் சீமையில் ஆங்கிலே யர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டவர் விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராம லிங்க சேதுபதி ஆவார். மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.03.1760 அன்று பிறந்தார். குழந்தைப் பருவத்தி லேயே இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு எண்ணிலடங் காத அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டார். இன்றைய இராமநாதபுரரம் மாவட்டத்தில் அமைந் துள்ள உலகப் புகழ்பெற்ற இராமேஸ்வரம் இராமநாதபுரம் சுவாமி கோவில் மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவர். அன்றைய காலகட்டத்தில் இராமநாதபுரம் சீமையில் அதிகளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்கு மதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந் திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கி லேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்ட வேண்டுமென்ற ஆணையினை துச்ச மென நினைத்து கப்பம் கட்ட மறுத்தவர்.
திருச்சி சிறையில் சில நாட்கள், அதன் பின்பு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய தேசத் தின் விடுதலைக்காக போராடி 23.01.1809 அன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் உயிர் நீத்தார். மன்னர் ரிபெல் முத்துராம லிங்க சேதுபதி அவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கெளரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்த கைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிப்பது நமது கட மையாகும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்த 121 பயனாளிகளுக்கு ரூ.6,38,154 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே. பிரவீன் குமார், இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி ஆகி யோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இராம நாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, இராமநாதபுரம் இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ. பாண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன் அவர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜய குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.