அரியலூர், மார்ச் 26 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது செங்குந்தபுரம். ஜெயங்கொண்டம் நகராட்சி யின் பிரதான பகுதியில் இதுவும் ஒன்று. இங்குள்ள முதலாவது வார்டு, 11-ஆவது வார்டு பகுதி களில் புதிய குடியிருப்புகள் அதி கரித்துவருகிறது. புதிய குடி யிருப்புப் பகுதிகளுக்கு முழுமை யாக தொடர்ந்து குடிநீர் வழங்க தற்போதைய நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியும் ஆழ்குழாய் கிணறு மூலம் போதுமானதாக இல்லை. இந்த இரண்டு வார்டுகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து. புதிதாக இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவில் இரண்டு நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். செங்குந்தபுரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும். புதிய குடியிருப்புப் பகுதிகளுக்குத் தார்சாலை அமைக்க வேண்டும். செங்குந்தபுரம் மேற்கு ஏரி யின் தெற்கு, மேற்குபுறத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் மக்க ளுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். இதன் இரண்டு புறமும் உள்ள கரை களை உயர்த்த வேண்டும். செங்குந்தபுரம் 3-முதல் 8-தெருக்கள் வரை உள்ள வீதிகளுக்கு இடையில் சந்து பாதை உள்ளது. இந்தப் பாதை யில் குப்பைகள் மண்டியுள்ளது. இது கொசு உற்பத்தி மையமாக மாறிவிட்டது. உடனடியாக குப்பைகளை அகற்றவேண்டும். செங்குந்தபுரம் ஆறா வது தெரு ஏரியையும் செங்குந்தபுரம் மேற்கு எரியையும் ஆழப்படுத்தி கரை யை பலப்படுத்த வேண்டும். ஏரி களில் மழைநீர் வீணாகாமல் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்குந்தபுரம் கல்குவாரி யிலிருந்து மீனாம்பாடி ஏரி வரையிலும், செங்குந்தபுரம் தெருவிலிருந்து பிரதான சாலையான மீனாம்படி ஏரி வரையிலும் மழைநீர் வடி கால் வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை யெழுத்து இயக்கம்நடைபெற்றது. மூத்த தோழர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து-பிரச்சார இயக்க த்தில் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க நிர்வாகி பத்மாவதி, கோவிந்த ராஜ், சுப்பிரமணியன், ரவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.