districts

img

அரியலூரில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்படுமா? சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 18 - தமிழகம் முழுவதும் 22 இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்ப டும் என தமிழக அரசு அறி வித்திருந்த நிலையில், தற்போது 4 இடங்களில் மட்டுமே மாட்டுவண்டி மணல்  குவாரி திறக்கப்பட்டுள்ளது. இது அரியலூர் மாவட்ட  மாட்டுவண்டி தொழிலாளர் கள் இடையே பெரும்  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது.  சட்டமன்றத்தில் அறி வித்தபடி தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் தா. பழூர், செந்துறை, திருமா னூர் ஒன்றியங்களில் உடனடி யாக மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்க கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுரு கன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், கைத்தறி நெசவு சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம். துரைராஜ், திருச்சி மண்டல துணைச் செயலாளர் நீல மேகம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங் கோவன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.  நீர்வள துறை அதிகாரி கள் உடனடியாக இடங்களை  ஆய்வு செய்து, மணல் அள்ள இடம் தேர்வு செய்து,  மாட்டுவண்டி மணல் குவா ரியை திறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அரிய லூர் மாவட்டத்தில் உள்ள  மாட்டு வண்டித் தொழிலா ளர்களை ஒன்று திரட்டி நீர்வளத்துறை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலச் செயலாளர் ஜெயபால் தெரிவித்தார்.  தொடர்ந்து காந்தி பூங்கா விலிருந்து முழக்கங்கள் எழுப்பியவாறு ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் அலு வலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.