districts

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

அரியலூர், ஏப்.6 - குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கைதை தொடர்ந்து மேலும்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (30). இவர் 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றதாகவும், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறு மியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்ப தாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்த ஒருவரையும், தங்கும்  விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி என்ப வரையும் சேர்த்து 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், சமீபத்தில் உதயநத்தம் கிரா மத்தைச் சேர்ந்த இந்திரா (47) என்பவரை யும், தனியார் உரிமையாளர் கண்ணன் என்ற  கந்தசாமி (48) ஆகியோர் கைது செய்யப்பட்ட  னர். அதனைத் தொடர்ந்து விடுதியில் வைத்து  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  மனோஜ்குமார் (48) என்பவரை செவ்வா யன்று அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் சுமதி கைது செய்தார். இந்த வழக்கு சம்பந்த மாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

;