districts

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரியலூரில் 15 பேர் வேட்புமனு தாக்கல்

மதுரை, பிப்.1- மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வேட்பு மனுத்தாக்கல் வெள்ளி யன்று துவங்கியது. மண்டல வாரியாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தேர்தல் ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் ஆண்கள் 6,57,809, பெண்கள் 6,81,500, மூன்றாம் பாலினத்தவர் 143 என மொத்தம் 13,39,452 வாக்காளர்கள் உள்ள னர். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது.  மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதையொட்டி வேட்பு மனுக்கள் பெறுதல் உள்ளிட்டப் பணிகளை மேற் கொள்ளும் வகையில், மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் வார்டுகள் வாரி யாக 12 உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு வார்டுகள் மற்றும் அலுவலகம் ஒதுக்கப்பட்டு வேட்பு மனுக்களைப் பெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மண்டலம் 1: மண்டலம் எண் 1க்குட்பட்ட  1, 20,  64, 65, 66, 67, 68, 69 ஆகிய வார்டு களுக்கு உதவித் தேர்தல் அலுவலர் பி.வி.ரவிச்சந்திரன் (கைப்பேசி  9498749001), வார்டுகள் 56, 57, 58, 59, 60, 61, 62, 63 ஆகிய வற்றுக்கு உதவித் தேர்தல் அலுவலர் பி.சுப்புத்தாய் (கைப்பேசி 9498748911), வார்டுகள் 2,  3,  4, 17, 18, 19, 21, 22 ஆகிய வற்றுக்கு உதவித் தேர்தல் அலுவலர் ஏ.ரெங்கராஜன் (கைப்பேசி 9498749021) ஆகியோரிடம், மதுரை டிபி சாலையில் உள்ள மண்டலம் 1இன் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.  மண்டலம் 1க்குட்பட்ட வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக பாத்திமா மகளிர் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்  0452 2310011.   மண்டலம் 2: மண்டலம் 2க்குட்பட்ட 23, 24, 25, 26, 27, 28, 29, 30 வார்டு களுக்கு உதவி தேர்தல் அலுவலர் எம்.அமிர்தலிங்கம்(கைப்பேசி 9498749002), வார்டுகள் 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய வற்றுக்கு உதவித் தேர்தல் அலுவலர் எஸ்.சேகர்(கைப்பேசி 9498748902), வார்டுகள் 14, 15, 16, 31, 32, 33, 34, 35 ஆகிய வற்றுக்கு உதவித் தேர்தல் அலுவலர் என்.ஆறுமுகம் (கைப்பேசி 9498748706) ஆகியோரிடம் பந்தயத் திடல்சாலை யில் உள்ள மண்டலம் 2 அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மண்டலம் 2க்கு வாக்கு எண்ணிக்கை மையமாக வக்பு வாரியக் கல்லூரி அறி விக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0452  2310022.  

மண்டலம் 3: மண்டலம் 3க்குட்பட்ட 43, 44, 45, 46, 47, 48, 49, 53 வார்டுகளுக்கு உதவித் தேர்தல் அலுவலர் பி. சுரேஷ்குமார் (கைப்பேசி 9498749003), வார்டுகள் 36, 37, 38, 39, 40, 41, 42, 87, 88 ஆகியவற்றுக்கு உதவித் தேர்தல் அலுவலர் ஆர்.அலெக்ஸ்சாண்டர் (கைப்பேசி 9498748903), வார்டுகள் 84, 85, 86, 89, 90, 91, 92, 100 ஆகியவற்றுக்கு உதவித்  தேர்தல் அலுவலர் எம்.வி.முருகேசபாண்டி யன் (கைப்பேசி  9498748913) ஆகியோரி டம் மதுரை சிஎம்ஆர் சாலையில் உள்ள மண்டலம் 3 அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். மண்டலம் 3-க்குட்பட்ட வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக தமிழ்நாடு பாலி டெக்னிக் (மகளிர்) கல்லூரி அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0452  2310033. மண்டலம் 4: மண்டலம் 4க்குட்பட்ட 50, 51, 52, 54, 55, 75, 76, 77  வார்டுகளுக்கு உதவித் தேர்தல் அலுவலர் என்.தெட்சிணா மூர்த்தி (கைப்பேசி 9498749004), வார்டுகள் 72,73, 93,94, 95, 96, 97, 98, 99 ஆகிய வற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் எம்.பி.மனோகரன் (கைப்பேசி 9498748904), வார்டுகள் 70, 71, 74, 78, 79, 80, 81, 82, 83 ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் ஏ.வரலட்சுமி (கைப்பேசி 9498749024) ஆகியோரிடம் மேலமாரட் சாலையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் வேட்பு  மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மண்டலம் 4க்குட்பட்ட வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக தமிழ்நாடு பாலி டெக்னிக் (ஆண்கள்) கல்லூரி அறி விக்கப்பட்டுள்ளது.  தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0452  2310044.

விதிமுறைகள்
வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 28 முதல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய அதிகபட்சம் இரண்டு வாகனங்களில் மட்டும் வரலாம். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர் தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட பிரதி நிதி மூலம் மனுத்தாக்கல் செய்யலாம். தேர்தல் பிரச்சாரத்துக்கு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டுதலுக்குட்பட்டு, உத வித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு கட்டுப்பாட்டு மையம் (0452 - 2310011, 2310022, 2310033, 2310044)  ஆகிய தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண்.1800 425 7861 மூலமோ தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.