districts

img

ஜெயங்கொண்டம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் பழங்கால சுவர்கள் கண்டெடுப்பு

அரியலூர், ஜூன் 4 - அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பணிகளில் தற்போது தோண்டத் தோண்ட கட்டிடச் சுவர்கள் தென்படு கின்றன. தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு  பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் தொடங்கி முதல்கட்டமாக கடந்த வருடம் துவங்கின. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாளிகைமேடும் அடங் கும். இங்கு அகழ்வாராய்ச்சி செய்வ தற்கான முன்னேற்பாடாக கடந்த பிப்ரவரி மாதம், மண்டி கிடக்கும் புல்  புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.  கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை  கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள  பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம்,  மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட  6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கி.மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ  எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.  

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21  ஆம் தேதியிலிருந்து ரேடார் கருவி  மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்க ளில் பணி மேற்கொண்டனர். இதில்  இரண்டடுக்கு சுவர் ஒன்று  கண்டு பிடிக்கப்பட்டதால், இப்பணியை மேலும் தீவிரப்படுத்தினர். அந்த  இடத்தில் கிடைக்கப்பட்ட  பானை  ஓட்டு வில்லைகள், கூரை ஓடுகள்,  ஆணி வகைகள், செப்புக்காசு  போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் புராதன பொருட்கள் கிடைக்கின்றனவா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலை யில், இரண்டாம் கட்ட அகழ்வாரா ய்ச்சி பணிகள் கடந்த பிப். 14 ஆம்  தேதி முதல் துவங்கப்பட்டன. கடந்த  2021-ல் 17 குழிகளும், இரண்டாம் கட்ட மாக 14 குழிகளும் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வரு கின்றன. தற்போது நடைபெற்ற ஆராய்ச்சிப்  பணிகளில் 9 அடி ஆழத்தில் 25  செ.மீ. நீளமும், 13 செ.மீ அகலமும்,  4.5 செ.மீ உயரமும் கொண்ட செங்கல் லால் ஆன சுவர் கண்டுபிடிக்கப்பட் டது. இந்த சுவரானது மேல்புறம் 34  வரிசைகளும், வடபுறம் 32 வரிசை களும், தென்புறம் 14 வரிசைகளும் கொண்ட சுவராக உள்ளது. ஆராய்ச்சிப் பணியில் சிறிய ஆணி கள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப் பெற்றன. மேலும் இப்பணிகளில் 40 தொழிலாளர்கள், அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் பணியாற்றி வரு கின்றனர். மேலும் அரிய வகை பொருட் கள் கிடைக்கலாம் என கருதப்படு கிறது.