அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பின்தங்கிய கிராமப்புற பெண்களின் வளர்ச்சி மற்றும் உதவி துவக்கம், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்கள், விற்பனைக்கென தனி கைபேசி செயலி துவக்கம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.