districts

img

கழுமங்கலம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர்

அரியலூர், ஜூலை 31 - அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங் கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித்  திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி  முன்னிலை வகித்தார். கழுமங்கலம் கிராம பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான, கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என ஏற்கனவே போக்கு வரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதன டிப்படையில் பொதுமக்களின் கோரிக் கையினை நிறைவேற்றும் வகையில், கழுமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புறநகர் பேருந்து சேவை யினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஞாயிறன்று துவக்கி வைத்தார். இந்தப் பேருந்து தினமும், கழு மங்கலம் கிராமத்திலிருந்து மாலை நேரங்களில் தினசரி இரண்டு நடை கள் கூடுதலாக இயக்கப்படும். பேருந்து  கழுமங்கலத்திலிருந்து புறப்பட்டு உடையார்பாளையம் வழியாக ஜெயங் கொண்டத்தை சென்றடையும். இத னால் கழுமங்கலம் கிராம பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர் நேரடியாக ஜெயங்கொண்டம் செல்வதற்கு கூடுதலாக புறநகர் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு, பொது மக்களின் கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது. மேலும், கழுமங்கலம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு  மருந்துத் துறையின் சார்பில் தேசிய ஊரக நலக்குழுமம் நிதியின் கீழ் ரூ.25  லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட  நலவாழ்வு மையத்தின் துணை சுகாதார  நிலையக் கட்டிடத்தினை போக்கு வரத்துத் துறை அமைச்சர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத் தார்.  அதனை தொடர்ந்து கழுமங்கலம் கிராமத்தில் கழுமங்கலம் முதல் பிலாக் குறிச்சி வரை ரூ.49.700 லட்சம் மதிப் பீட்டில், 1.200 கி.மீ நீளத்திற்கு புதிய  தார்ச்சாலை அமைக்கும் பணியினை யும் தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை கள் தொடர்பான மனுக்களை பெற்று  இம்மனுக்களின் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமென, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார்.