districts

img

அந்தநல்லூர் மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, ஜன.23 - திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அந்த நல்லூர் ஒன்றியத்தில் வசிக் கும் விவசாயத் தொழிலா ளர்களுக்கு நூறுநாள் வேலை வழங்காததை கண் டித்து, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்த நல்லூர் திட்ட அலுவலர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய பாஜக அரசு நூறு நாள் வேலையை சிதைக்கும் நோக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது. 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினால் மட்டுமே அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும் என பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், ஒன்றிய அரசு தொடர்ந்து நிதியை குறைத்து, ரூ.60 ஆயிரம் கோடியை மட்டும் கடந்தாண்டு ஒதுக்கி கோடிக்கணக்கான மக்க ளை வஞ்சித்து இருக்கிறது.

வேலை அட்டை பெற்ற 25.25 கோடி மக்களில், 14.35  கோடி பேருக்கு மட்டுமே வேலை கொடுத்தது ஒன்றிய  பாஜக அரசு. தற்போது அவர்களைத் தவிர, வேலை கொடுக்கப்படாத மற்ற 10.90 லட்சம் பேரை நீக்கி, மிகப்பெரிய தாக்கு தல் நடத்தியுள்ளது. தற்போது ஆதார் அட்டை யின் அடிப்படையில் மட்டுமே சம்பளம் வழங்கப் படும் என முடிவெடுத்து ஆதார் இணைப்பிற்கான காலத்தை நீட்டிக்காமல், இறுதிப்படுத்தி 1.80 லட்சம் மக்களை வெளியேற்றி இருக்கிறது. மொத்தம் 12.70 கோடி பேரை வெளியேற்றி இருக்கிறது.

 ஒன்றிய அரசின் இச்செயலைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட த்தை பாதுகாக்க வேண்டும். ABPS முறையை கைவிட வேண்டும். வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை 200 நாட்களாகவும், ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணத்தை உடனே வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேலானவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.  

போராட்டத்திற்கு ஒன்றி யத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் வீ.மாரி யப்பன் கண்டன உரையாற்றி னார். மேலும் மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட் டச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், பொருளாளர் இளங்கோவன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சீனி வாசன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதில் 300-க்கும் மேற் பட்ட மக்கள் பங்கேற்றனர்.

இறுதியாக, திட்ட அலுவ லரை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது. மனுக்களைப் பெற்ற  திட்ட அலுவலர், “மனுக் களை மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்புவதோடு, நிலு வைத்தொகையை உடனே பெற்று கொடுக்க விரைந்து செயல்படுகிறோம்” என  உறுதியளித்தார்.  அதன்பேரில் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.