districts

பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

அரியலூர், பிப்.7- அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்  (25). பி.சி.ஏ. படித்துள்ள இவர், ரீவைண்டிங் பணி செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே  தெருவை சேர்ந்தவர் வினோதினி (22). இவர்  பி.எஸ்சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும்  கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.  மேலும் சனிக்கிழமை வீட்டை விட்டு வெளி யேறிய காதல் ஜோடி, சமயபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்க ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்  கோரி இந்த காதல் திருமண ஜோடி ஜெயங் கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  இதற்கிடையே தங்களது மகளை காண வில்லை என வினோதினியின் பெற்றோர் உடையார்பாளையம் காவல்துறையில் புகார்  செய்திருந்தனர். இந்நிலையில் காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்த தகவல் அறிந்து, மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த வினோதினியின் பெற்றோர், தங்களுக்கும் தங்களது மகளுக்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை என்று கூறி எழுதிக் கொடுத்ததாக  கூறப்படுகிறது. இதையடுத்து சிவக்குமாரின்  பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சுமதி, இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் பெண்  தரப்பினர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அறிவுரை கூறி வினோதினியை சிவகுமாருடன் அனுப்பி வைத்தார்.

;