ஜெயங்கொண்டம், மார்ச் 21 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (48). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு மருதுபாலன், இந்துமதி, பாலாஜி என மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் ரவி மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பானுமதி தனது தாயார் வீட்டில் தங்கி மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார். கணவர் மனநோயால் பாதிக்கப் பட்ட நிலையில், ஜெயங்கொண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பானுமதி கூலி வேலைகளுக்கு சென்றும், பெட்ரோல் பங்குகளில் தினக் கூலியாக வேலை பார்த்தும் வந்துள்ளார். இந்நிலையில் முதல் மகன் மருது பாலன் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித் துள்ள நிலையில், இரண்டாவது மகள் பிஎஸ்சி நர்சிங் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் மூன்றாவது மகன் பாலாஜி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு சேர்ந்துள்ளார். தனது மகன் பாலாஜி படிப்பு செல விற்காக பானுமதி, தான் வளர்த்து வந்த பசு மாட்டினை விற்று மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பணம் செலுத் தியுள்ளார். இதில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு முடித்த நிலையில், மறு படியும் மருத்துவக் கல்வியை தொடர் வதற்கு போதிய பணவசதி இல்லை. இதனால் மாணவர் பாலாஜி கல்லூரி நிர்வாகத்திடம் தனது குடும்ப சூழ்நி லையை கூறியுள்ளார்.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் தன்னிடம் படித்து, தற்போது மருத்துவ துறையில் உள்ள மாணவர் ஒருவரி டம், இந்த மாணவரின் நிலைமையை கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ள விஜில்அன்பையா என்பவர் மூலம், அரசு மருத்துவர் கணேஷ் என்பவ ரின் உதவியுடன், சென்னை ஹரிக்கேன் வெட்ஸ் அறக்கட்டளை, மாணவன் பாலாஜியின் மீதமுள்ள நான்கு ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பை முடிப்பதற் கும் சாப்பாட்டிற்கு ஆகும் செலவு முழு வதையும் ஏற்றுக் கொண்டது. மேலும் மாணவரின் முதலாமாண்டு படிப்புக்காக அவரது தாய் விற்ற பசு மாட்டிற்கு இணையாக ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு புதிய பசுமாட்டினை வாங்கி அவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் அந்தப் பசு மாட்டினை பராமரிப் பதற்காக வைக்கோல் கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் பணம் வழங்கி யுள்ளனர். இந்த பேருதவியால் அந்த மாணவர் மற்றும் மாணவரின் தாய் உட்பட அனை வரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களுக்கு உதவிய ஹரிக்கேன் அறக் கட்டளைக்கு மாணவன் பாலாஜி மற்றும் அவரது தாய் பானுமதி நன்றி தெரி வித்துள்ளனர். இதில் உடையார்பாளை யம் கால்நடை மருத்துவர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.