அரியலூர், ஜன.21- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான மிதி வண்டி போட்டி சனிக்கிழமை நடை பெற்றது. போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, கீழப்பழுவூர் விநாயகா கல்வி நிறுவன தாளாளர் பாஸ்கர், சுவாமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, திரு மானூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழப்பழுவூரில் தொடங்கிய போட்டி தஞ்சாவூர் பிரதானச் சாலை வழியாகச் சென்று மீண்டும் கீழப்பழுவூரில் நிறைவ டைந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.