districts

img

ஜெயங்கொண்டம் நகராட்சியில் சின்னதுரை எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் சுயேட்சையாக போட்டி யிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7-வதுவார்டில்  பிரேமாவதி, 5-வது வார்டில் ராதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மனுக்கள் ஏற்கப்பட்டு கட்சி சின்னமான சுத்தி அரிவாள் நட்சத்திரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.  இந்நிலையில் காந்தி பூங்காவில் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கும் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை எம்எல்ஏவுமான சின்னதுரை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து 5 மற்றும் 7-வது வார்டுகளுக்கு சென்றுவீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் உள்ளிட்ட பலரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். சின்னபாளையம் 5-ஆவது வார்டில் போட்டியிடும் ராதா அனன்யாவிற்கு வாக்கு சேகரித்த னர். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட் டோர் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர். மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் அனைத்தையும் செய்ய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர்களால் மட்டுமே முடியும். போராடி அனைத்துஅடிப்படை வசதிகளையும்பெற்று தர முடியும் என பேசினார்.