அரியலூர், மே 19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தா.பழூர் ஒன்றியத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் போக்கு வரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றியக் கழகச் செயலாளருமான க.சொ.க.கண்ணன் வர வேற்றார். கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘தமிழக அரசு போக்கு வரத்துத் துறையில் ரூ.48 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றது. பேருந்துகளில் கட்டணம் உயர்வு என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். தமிழக அரசு சார்பில் 2,500 புதிய பேருந்துகள் வர உள்ளன. அதன் பிறகு பற்றாக்குறை உள்ள பகுதிக ளில் படிப்படியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ள தாக தெரிவித்தார். இதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.